பயணச்சீட்டை ரத்து செய்தவர்களிடம் இருந்து ரயில்வே துறைக்கு ரூ.5,366.53 கோடி லாபம் பெற்றுள்ளது.
ரயில் பயணச்சீட்டை ரத்து செய்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொள்கை முடிவு எடுத்தது. ஆர்.டி.ஐ வெளியிட்ட தகவலின் படி, கடந்த 2015-ஆம் ஆண்டில் இருந்து 2019-ஆம் ஆண்டு வரையான காலக்கட்டத்தில் பயணச்சீட்டு ரத்து செய்தவர்களிடம் இருந்து ரூ.5,366 கோடி ரூபாய் தொகை கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே துறையில், கடந்த 2017-2018 நிதியாண்டில், ரயில் பயணச்சீட்டு ரத்து செய்தவர்களிடம் இருந்து ரூ.1,205.96 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-2019 நிதியாண்டில், பயணச்சீட்டு ரத்து செய்தவர்களிடம் இருந்து ரூ.1,852.50 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட ரூ.646.54 கோடி அதிகமாகும். அதே போல், தெற்கு ரயில்வே துறையில், கடந்த 2017-18ல் 176.76 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவே கடந்த 2018-19ல், 182.56 கோடியாக உயர்ந்துள்ளது.
இதை தொடர்ந்து, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிராவின் சில பகுதிகள் மற்றும் மத்திய பிரதேசம் அடங்கும் தெற்கு மத்திய ரயில்வே துறையில் 127.22 கோடியில் இருந்து 690.80 கோடியாக, 500 சதவீதம் அதிகரித்துள்ளது.